Published : 12 Jul 2019 06:14 PM
Last Updated : 12 Jul 2019 06:14 PM
ஹைதராபாத்தில் டிக் -டாக் வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் உறவினர் உதவாமல் போனதால் ஏரியில் குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் உறவினர் நரசிம்மலு என்பவரும் சேர்ந்து புறநகர் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் குளித்தனர். ஆனந்த குளியல் போட்ட இளைஞர்கள் இருவரும் அதனை டிக் டாக் ஆப்- மூலம் வீடியோ எடுக்க தொடங்கினர்.
நரசிம்மலு குளிப்பதை ஆர்வத்துடன் வீடியோ எடுத்த பிரசாந்த், மெய்மறந்து போனார். இந்தநிலையில் ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற நரசிம்மலு மூழ்கத் தொடங்கினார். ஆனால் வீடியோ எடுப்பதில் ஆர்வமாக இருந்த பிரசாந்த் இதனை கவனிக்கவில்லை.
வீடியோவுக்காக நரசிம்மலு உடல் பாவனையை காட்டுவதாக எண்ணி தொடர்ந்து வீடியோ எடுப்பதிலேயே ஆர்வமாக இருந்துள்ளார். நீருக்குள் முழ்கும் நிலையில் நரசிம்மலு இருக்கும்போது தான் விபரீதத்தை பிரசாந்த் உணர்ந்துள்ளார்.
உடனடியாக கேமராவை வைத்து விட்டு அவரை மீட்க முயன்றார். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களையும் உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக நரசிம்மலு தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT