Published : 29 Jun 2019 01:12 PM
Last Updated : 29 Jun 2019 01:12 PM

‘கூட்டங்களில் இனி பிஸ்கட் கிடையாது’ - மத்திய சுகாதாரத்துறை கடும் உத்தரவு

சுகாதாரத்துறை அமைச்சக கூட்டங்களில் இனிமேல் பிஸ்கட் உட்பட துரித உணவுகள் வழங்கப்படக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை சுற்றறிக்கையில், ‘‘அமைச்சக கூட்டங்களில் பிஸ்கெட் அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகள் வழங்கக் கூடாது. அதற்கு பதில் ஆரோக்கியம் தரும் வகையிலான உலர் பழங்கள், வறுத்த கொண்டைக்கடலை, நட்ஸ் உள்ளிட்ட உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும்.  இது உடனடியாக அமலுக்கு வருகிறது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘இந்த நடவடிக்கை எங்களுக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு டாக்டர் என்பதால் துரித உணவுகள் உள்ளிட்ட நொறுக்கு தீனிகள் எந்த மாதிரியான உடல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை அவர் உணர்ந்துள்ளார். சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருமு் இந்த உத்தரவை வரவேற்கின்றனர்’’ எனக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x