Published : 29 Jun 2019 08:50 AM
Last Updated : 29 Jun 2019 08:50 AM
கர்நாடக துணை முதல்வரும், பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பரமேஷ்வர் நேற்று பெங்களூருவில் 'நகர் வலம்' மேற்கொண்டார். பெங்களூரு ராஜாஜிநகர், மல்லேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்த போது குடிநீர்த் தட்டுப் பாடு, சாலை பராமரிப்பு, குப்பை அகற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஏராளமானோர் அவரிடம் புகார் அளித்தனர். அதனை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு உடனடியாக அவர் உத்தரவிட்டார்.
பின்னர் பரமேஷ்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் பெங்களூரு, நாட்டில் மிகவேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்தும், கர்நாடகாவின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு குடியேறுகிறார்கள். பெங்களூரு மாநகரில் இடப்பற்றாக்குறை எழுந்துள்ளதால், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது அதிகரித்துள்ளது.
இத்தகைய அடுக்குமாடி குடி யிருப்புகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுப்பது மாநகராட்சிக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. குடிநீர் வசதி இருக்கிறதா என் பதை ஆராயாமலே, கட்டுமான நிறுவனங்கள் ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விடுகின்றன. வீடுகளை விற்கும் போது குடிநீருக்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்காமல் விற்று விடுகின்ற னர். இதன் காரணமாக பொரு ளாதார சிக்கலும், உடல் ரீதியான சிக்கல்களும் கூட எழுகின்றன.
எனவே பெங்களூருவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதை தடை செய்வது குறித்து அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT