Published : 04 Aug 2017 01:07 PM
Last Updated : 04 Aug 2017 01:07 PM
ராஜஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் பார்வையிட்டார்.
ராஜஸ்தானில் பெய்த கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அம்மாநிலத்தின் ஜல்லோர், பாலி, சிரோஹி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகளவில் உள்ளன.
ராஜஸ்தானின் ஜல்லோர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பாதிக்கப்பட்ட 12,000 பேர் சமூக கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தன்னார்வ நிறுவனங்கள் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் துணை பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வெள்ளம் பாதித்த ஜல்லோர் மாவட்டத்தில் இன்று பார்வையிட்டார்.
ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான அசோக் கெலாட் ஆகியோரும் உடன் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT