Last Updated : 11 Aug, 2017 09:56 AM

 

Published : 11 Aug 2017 09:56 AM
Last Updated : 11 Aug 2017 09:56 AM

உத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

உத்தரபிரதேசத்தில்ல் அகால் தக்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் விபத்து தவிர்க்கப்பட்டது.

கொல்கத்தா - அமிர்தசரஸ் இடையிலான அகால் தக்த் எக்ஸ்பிரஸ் உ.பி.யில் நேற்று அதிகாலை 1 மணியளவில் லக்னோ நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் இந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ரயில் அமேதி மாவட்டம், அக்பர்கஞ்ச் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரயிலில் குளிர்சாதன வகுப்பு பெட்டி ஒன்றின் கழிப்பறையில் வெடிகுண்டு, 2 லைட்டர்கள் மற்றும் எச்சரிக்கை கடிதம் கொண்ட பாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது.

குறைந்த செறிவு கொண்டு இந்த வெடிகுண்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது. வெடிகுண்டுடன் இருந்த கடிதத்தில், ‘அபு துஜானாவின் மரணத்துக்கு இந்தியா உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தெற்கு காஷ்மீர் மண்டல கமாண்டராக செயல்பட்டு வந்த அபு துஜானாவும் அவரது உதவியாளரும் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் முக்கிய 10 தீவிரவாதிகளில் துஜானாவும் ஒருவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x