Last Updated : 27 Aug, 2017 12:29 PM

 

Published : 27 Aug 2017 12:29 PM
Last Updated : 27 Aug 2017 12:29 PM

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் பள்ளத்தாக்கின் புல்வாமா மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் மூவரும் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

இதுகுறித்து புல்வாமா மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

"சனிக்கிழமை நடந்த சண்டையில் புல்வாமா போலீஸ் எல்லையில் கொல்லப்பட்ட வெளிநாட்டு தீவிரவாதிகள் அபு சாத், தாவூத் மற்றும் அல் பாக்ர் ஆவர். அவர்கள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் (ஜெம்) தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்" என்றார் அவர்.

சனிக்கிழமை அதிகாலை 4 மணிஅளவில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடங்கிய சண்டை ஏறத்தாழ 19 மணி நேரம் நீடித்தது.

இதில் நான்கு காவலர்கள், மத்திய ரிசர்வ் படையைச் சார்ந்த நான்கு காவலர்கள் மற்றும் மூன்று தீவிரவாதிகள் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x