Published : 13 Aug 2017 12:13 PM
Last Updated : 13 Aug 2017 12:13 PM

மகாராஷ்டிராவில் அமைச்சர் ராஜினாமா

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய். நாசிக் நகரில் அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றம் செய்து ஊழல் புரிந்ததாக இவர் மீது புகார் எழுந்தது.

எதிர்க்கட்சிகளின் நெருக்குதலால் லோக் ஆயுக்தா விசாரணைக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார். பாஜக அமைச்சர் பிரகாஷ் மேத்தா மீதான ஊழல் புகார் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் சுபாஷ் தேசாய் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் முதல்வர் பட்னாவிஸ் இதை ஏற்கவில்லை. இதை காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x