Published : 07 Aug 2017 08:41 AM
Last Updated : 07 Aug 2017 08:41 AM

அமர்நாத் தீவிரவாத தாக்குதல் வழக்கில் 3 பேர் கைது

அமர்நாத் தீவிரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோயிலுக்கு சென்றுவிட்டு கடந்த ஜூலை 10-ம் தேதி பஸ்ஸில் திரும்பி கொண்டிருந்த பக்தர்களை குறிவைத்து தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

வழக்கு குறித்து காஷ்மீர் ஐஜி முனீர் கான், நகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அமர்நாத் பக்தர்கள்ள மீது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களில் பாகிஸ்தானை சேர்ந்த அபு இஸ்மாயில், காஷ்மீரை சேர்ந்த யவார் ஆகியோரை அடையாளம் கண்டுபிடித்துள்ளோம்.

நான்கு தீவிரவாதிகளுக்கும் வாகனம், தங்குமிட வசதிகளை செய்து கொடுத்த பிலால், ஆசிஷ், அகமது ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள் ளன. இதன்மூலம் அமர்நாத் தாக்குதலை நடத்திய தீவிரவாதி களை மிகவும் நெருங்கிவிட்டோம். விரைவில் அவர்கள் அழிக்கப் படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x