Last Updated : 03 Aug, 2017 05:45 PM

 

Published : 03 Aug 2017 05:45 PM
Last Updated : 03 Aug 2017 05:45 PM

மதானிக்கு பாதுகாப்பு அளிக்க ரூ.15 லட்சம் கேட்பதா? உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

2008-ம் ஆண்டு பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்துல் நசீர் மதானி தன் மகன் திருமணத்துக்குச் செல்ல ஜாமீன் அளிக்கப்பட்டார். இவருக்கு பாதுகாப்பு அளிக்க கர்நாடக அரசு மதானி ரூ.15 லட்சம் தர வேண்டும் என்று கோரியுள்ளது.

இந்த விசாரணை இன்று நடைபெற்ற போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போப்தே, நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு பாதுகாப்பு அளிக்க கர்நாடக போலீஸ் மாதானியிடமிருந்து ரூ.14,79,876 கேட்டு வலியுறுத்தியதையடுத்து அதிர்ச்சி அடைந்தது.

மேலும், மதானி கேரளாவுக்குச் செல்ல ஜாமீன் அளித்த உச்ச நீதிமன்ற உத்தரவையே தடை செய்யப்பார்க்கிறதா கர்நாடகா என்று வெளிப்படையாகவே எரிச்சலடைந்த நீதிபதிகள் கர்நாடக அரசைக் கேட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு பாதுகாப்பு அளிப்பது போலீஸ் கடமையல்லவா என்று கேட்டது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து இதற்காக ஆகும் செலவை குறித்த புதிய பட்டியலை ஆகஸ்ட் 4-ம் தேதி தாக்கல் செய்ய வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் மதானிக்கு அவர் மகன் திருமணத்திற்காக 14 நாட்கள் ஜாமீன் அளித்தது. ஆனால் இதற்கான போலீஸ் பாதுகாப்புச் செலவை மதானியே ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து கர்நாடக போலீஸ் இத்தகைய பெரிய தொகையை மதானியிடம் கோரியிருப்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு ஆளாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x