Published : 12 Aug 2017 10:18 AM
Last Updated : 12 Aug 2017 10:18 AM

ஆழியாறு ஒப்பந்தம் மறுஆய்வு செய்ய பினராயி விருப்பம்

பரம்பிகுளம்-ஆழியாறு நதிநீர் பிரச்சினை தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

பரம்பிகுளம்-ஆழியாறு

நதிநீர் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையில் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளத்தக்க சுமுக தீர்வு எட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியுள்ளேன். எனினும் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இன்னும் தேதி முடிவாகவில்லை. இப்பிரச்சினையை உணர்வுபூர்வமாக அணுகக்கூடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x