Published : 07 Aug 2017 09:54 AM
Last Updated : 07 Aug 2017 09:54 AM
உத்தரபிரதேசத்தில் வங்கதேச தீவிரவாதி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
‘அன்சருல்லா பங்களா டீம் (ஏபிடி)’ என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இவரை, முசாபர்நகர் மாவட்டம், குடேசரா என்ற இடத்தில், உ.பி. தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஸ்) போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஏடிஎஸ் ஐ.ஜி. அசீம் அருண் கூறும்போது, “அப்துல்லா என்ற இந்நபர் கடந்த ஒரு மாதமாக குடேசரா பகுதியில் வசித்து வந்தார். இதற்கு முன் சகரான்பூர் மாவட்டம், தியோபந்த் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு முதல் வசித்துள்ளார். இவர் போலி அடையாளத்தில் ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். வங்கதேச தீவிரவாதிகள் இங்கு பாதுகாப்பாக தங்கி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு வசதியாக, அவர்கள் போலி அடையாள ஆவணங்கள் பெறுவதற்கு அப்துல்லா தொடர்ந்து உதவி வந்துள்ளார்” என்றார்.
அப்துல்லா கைது செய்யப்பட்ட பிறகு அவர் வசித்த இடத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். அல் காய்தா தீவிரவாத அமைப்பால் உத்வேகம் பெற்று வங்கதேசத்தில் தொடங்கப்பட்ட அமைப்பே ஏபிடி ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT