Published : 25 Nov 2014 12:35 PM
Last Updated : 25 Nov 2014 12:35 PM
ஹைதராபாத் ராஜீவ்காந்தி விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, இன்று காலை அவை கூடியவுடனேயே, ஹைதராபாத் ராஜீவ்காந்தி விமான நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பினர். அவைத்தலைவர் அறிவுறுத்தலை மீறியும் அமளி நீடித்ததால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதே கோரிக்கையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT