Published : 19 Aug 2017 09:52 AM
Last Updated : 19 Aug 2017 09:52 AM

அரசியல் நிலை: தேர்தல் ஆணையர் ராவத் வருத்தம்

அரசியலில் நெறிமுறை இல்லை என்று தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேட்டியளித்த ஓம் பிரகாஷ் ராவத் கூறுகையில், ‘‘தேர்தல்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடக்கும்போது தான் ஜனநாயகம் வளர்கிறது. ஆனால், சாதாரண மனிதன் குறைகூறும் நிலையே அரசியலில் காணப்படுகிறது. நெறிமுறை இல்லாமல் எந்த விலை கொடுத்தாவது வெற்றி பெறு வது அரசியலில் இப்போது சாதாரணமாகி விட்டது’’ என்று வருத்தம் தெரிவித்தார்.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு சமீபத்தில், 2012-13 மற்றும் 2015-16-ல் கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளுக்கு ரூ.956.77 கோடியை நன்கொடையாக கொடுத்துள்ளன என்று கூறியது.

இந்நிலையில் அரசியலில் நெறிமுறை இல்லை என்று தேர்தல் ஆணையர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x