Published : 01 Aug 2017 09:36 AM
Last Updated : 01 Aug 2017 09:36 AM
காஷ்மீரில் பர்கா அணிந்து வந்த தீவிரவாதிகள், வங்கியில் ரூ.15 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
காஷ்மீர் மாநிலம், அனந்தநாக் மாவட்டம், அர்வானி என்ற இடத்தில் ஜம்மு காஷ்மீர் வங்கிக் கிளை உள்ளது. நேற்று காலை 3 தீவிரவாதிகள் பர்கா அணிந்து வங்கிக்கு வந்தனர். திடீரென துப்பாக்கி முனையில் காசாளர் கவுன்ட்டரில் இருந்த ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தை பறித்துக்கொண்டனர். மேலும் கணினி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திய பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றனர். காஷ்மீரில் கடந்த ஓராண்டில் இது ஏழாவது முறை நடந்த வங்கிக் கொள்ளையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT