Last Updated : 02 Aug, 2017 01:46 PM

 

Published : 02 Aug 2017 01:46 PM
Last Updated : 02 Aug 2017 01:46 PM

பெங்களூரு வருமான வரித்துறை சோதனை: இழிவான யுக்தி, அரசியல் பழிவாங்கும் செயல்- காங்கிரஸ் கடும் தாக்கு

Congress cries foul over tax raids in Bengaluru

 

குஜராத் எம்எல்ஏக்களை பெங்களூருவில் தங்கவைத்த கர்நாடக அமைச்சர் விடுதியிலும், வீட்டிலும் வருமான வரித்துறை சோதனையடுத்து, பாஜக அரசியல் பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத் எம்எல்ஏக்களை பெங்களூருவில் தங்க வைத்துள்ள கர்நாடக அமைச்சரின் வீட்டிலும், எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஈகிள்டன் விடுதியிலும் வருமான வரித்துறையினர் புதன்கிழமை காலை சோதனை நடத்தினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ''இது அரசியல் பழிவாங்கும் செயல். தேர்தல் நடைபெறும் நேரத்தில் சோதனைகள் நடைபெறுவது சரியான செயல் அல்ல'' என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறும்போது, ''குஜராத்தில் இருந்து ஒரு மாநிலங்களவை பதவியைப் பிடிக்க பாஜக மேற்கொண்ட இழிவான யுக்தி இது.

முன்னதாக குஜராத் எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை தோல்வியடைந்த பிறகு விரக்தியடைந்த பாஜக அரசு, காங்கிரஸார் மீது வருமான வரித்துறை சோதனைகளை நடத்துகிறது'' என்றார்.

இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த குஜராத் மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல், ''ஒற்றை எம்.பி. சீட்டுக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜக, பழிவாங்கும் நோக்கில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x