Last Updated : 24 Aug, 2017 10:08 AM

 

Published : 24 Aug 2017 10:08 AM
Last Updated : 24 Aug 2017 10:08 AM

உச்ச நீதிமன்றத்தில் திருப்பம் :காவிரியின் குறுக்கேஅணை கட்ட தமிழகம் எதிர்ப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு இல்லை’ என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘‘காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்ட அனுமதிக்க முடியாது. அவ்வாறு புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது கடுமையாக பாதிக்கப்படும். எனவே காவிரி யின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்டக் கூடாது’’ என வாதிட்டார்.

வழக்கு விசாரணையின்போது தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x