Published : 21 Aug 2017 10:07 AM
Last Updated : 21 Aug 2017 10:07 AM

மழை, வெள்ளத்துக்கு உ.பி.யில் 69 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் மழை, வெள்ளத்துக்கு 69 பேர் பலியாகியுள்ளனர்.

பிஹார், அசாம் உட்பட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இரு மாநிலங்களிலும் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பிஹார் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்துக்கு 253 பேர் இறந்துள்ளனர். இந்த

மாநிலங்களில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதேபோல, உத்தரபிரதேசத்திலும் கடும் மழை காரணமாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக 24 மாவட்டங்களில் உள்ள 2,523 கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் முடுக்கிவிட்டுள்ளார்.

போர்க்கால அடிப்படையில் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x