Last Updated : 11 Aug, 2017 09:51 AM

 

Published : 11 Aug 2017 09:51 AM
Last Updated : 11 Aug 2017 09:51 AM

டெல்லியில் 2 தீவிரவாதிகள் கைது

நாட்டின் சுதந்திர தினம் நெருங்கிவரும் வேளையில், டெல்லியில் அல்-காய்தா தீவிரவாதிகள் இருவர் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் நேற்று கூறினர்.

முதல் வழக்கில், சையது முகம்மது ஜிஷான் என்பவரை டெல்லி காவல்துறையின் சிறப்பு படையினர் கைது செய்தனர். சவுதி அரேபியாவில் இருந்து இவர் டெல்லி அழைத்துவரப்பட்ட பின் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2015-ல் அல்-காய்தா தீவிரவாதிகள் மூவர் கைது செய்யப்பட்டதில் இருந்து ஜிஷானை கைது செய்ய போலீஸார் காத்திருந்தனர். இவர் கைது செய்யப்பட்டதை போலீஸ் உயரதிகாரிகள் உறுதி செய்தனர்.

மற்றொரு வழக்கில் அல் காய்தா அமைப்புடன் தொடர்புடைய ரஜா-உல்-அகமது (25) என்பவரை மேற்கு வங்க போலீஸார் அளித்த ரகசியத் தகவலின் பேரில் கைது செய்தனர். ரஜா-உல்-ஹக் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாக கூறிய அதிகாரிகள் அவர் எந்த தேதியில் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.

இவர், அல்-காய்தா அமைப்பால் உத்வேகம் பெற்று வங்க தேசத்தில் செயல்படும் அன்சருல்லா பங்களா டீம் (ஏபிடி) என்று அமைப்பின் உறுப்பினர் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x