Published : 04 Aug 2017 10:10 AM
Last Updated : 04 Aug 2017 10:10 AM

3 பேர் மீது பசு குண்டர்கள் கடும் தாக்குதல்

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக, லாரியில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாகக் கூறி அதன் ஓட்டுநர் உட்பட 3 பேர் மீது பசு குண்டர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

போஜ்பூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் (84) ஷாபூர் வழியாக சென்ற ஒரு லாரியில் மாட்டிறைச்சி இருந்ததாக கூறி, லாரி ஓட்டுநர் மற்றும் 2 பேர் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். போலீஸார் அவர்களை மீட்டுள்ளனர். விசாரணையில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்லவில்லை என்றும் எருமை இறைச்சி எடுத்துச் சென்றதாகவும் லாரி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தாக்குதல் நடத்தியவர்கள் பஜ்ரங்தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x