Published : 24 Aug 2017 10:04 AM
Last Updated : 24 Aug 2017 10:04 AM

தேரா சச்சா சவுதா தலைவர் மீதான பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு: தற்காலிக சிறைச்சாலை ஆகிறது கிரிக்கெட் மைதானம்

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் மீதான பாலியல் புகார் வழக்கில் 25-ம் தேதி (நாளை) தீர்ப்பு வர இருப்பதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சமாளிக்க சண்டிகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை தற்காலிக சிறையாக அறிவிக்க சண்டிகர் யூனியன் பிரதேசம் முடிவு செய்துள்ளது.

ஹரியாணா மாநிலம் சிர்ஸாவில் இருந்து செயல்படும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் என்பவர் தனது 2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குர்மித் ராம் ரஹீம் மீது 2002-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 25-ம் தேதி (நாளை) தீர்ப்பு வெளியாகிறது.

குர்மித் ராம் ரஹீமுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் இருப்பதால் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சமாளிக்க சண்டிகரில் செக்டார் 16-ல் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தை தற்காலிக சிறையாக அறிவிக்க சண்டிகர் யூனியன் பிரதேசம் முடிவு செய்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்து பவர்கள் தற்காலிக சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப், மற்றும் ஹரியாணா அரசுகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த மாநிலங்களின் போலீஸ் உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். முக்கிய இடங்களில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு போலீஸாரின் கொடி அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x