Published : 19 Nov 2014 02:58 PM
Last Updated : 19 Nov 2014 02:58 PM
மகாராஷ்டிராவில் விரைவில் இடைக்காலத் தேர்தல் வரும் என்று தேசியவாத கட்சித்தலைவர் சரத் பவார் கூறியிருப்பதற்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா அரசியலில் நிலவும் நிலையற்ற தன்மையைப் பயன்படுத்தி அரசியல் லாபம் காண சரத்பவார் முயல்வதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு தருவதாக கூறிவிட்டு, அதனைத் திரும்பப் பெறுவதாக மிரட்டுவதன் மூலம் பவார் அரசியல் ஆதாயம் தேட முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சிவசேனா, தங்கள் கட்சி எந்த நிலையிலும் நேர்மையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT