Published : 10 Aug 2017 10:16 AM
Last Updated : 10 Aug 2017 10:16 AM

இந்தியா - சீனா இடையே பெரிய பிரச்சினை இல்லை: தலாய் லாமா கருத்து

இந்தியா - சீனா இடையே டோக்லாம் எல்லை விவகாரம் ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று புத்தமதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.

சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளதால் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் ‘எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா’ சார்பில் நடந்த நிகழ்ச்சியில் புத்தமதத் தலைவர் தலாய் லாமா பேசியதாவது:

இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள். இரு நாடுகளும் அருகருகே வாழ வேண்டி உள்ளது. கடந்த 1962-ம் ஆண்டில் கூட பொம்டில்லா பகுதிக்கு சீன படைகள் சென்றன. பின்னர், சீனா தனது படைகளை திரும்ப பெற்றது.

ஒரு காலத்தில் இருநாடுகளும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தின. ஆனால், சகோதர உறவுடன் ‘இந்தி -சீனி பாய் பாய்’ என்று இருப்பதுதான் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா - சீனா இடையே டோக்லாம் விவகாரம் ஒரு பெரிய பிரச்சினை இல்லை. பிரச்சாரங்கள்தான் விஷயத்தை சிக்கலாக்கிவிடும். இந்தியாவில் சுதந்திரம் உள்ளது. சுதந்திரம் இல்லாத இடத்தில் (சீனா) இருக்க விரும்பவில்லை.

இவ்வாறு தலாய் லாமா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x