Published : 27 Aug 2017 08:09 AM
Last Updated : 27 Aug 2017 08:09 AM

பஞ்சாப் ஹரியாணாவில் 450 ரயில்கள் ரத்து

பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததால் கலவரம் மூண்டுள்ளது. இதனால் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் சுமார் 450 ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் நீரஜ் சர்மா கூறும்போது, “பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக 445 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 40 ரயில்கள் வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன” என்றார்.

இதுபோல பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களுக்கு செல்லும் பஸ் சேவையையும் டெல்லி போக்குவரத்துக் கழகம் ரத்து செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x