Last Updated : 10 Nov, 2014 10:25 AM

 

Published : 10 Nov 2014 10:25 AM
Last Updated : 10 Nov 2014 10:25 AM

இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

கடந்த மே மாதம் புதிய அரசு மத்தியில் ஆட்சியை அமைத்ததற்குப் பிறகு, முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெறுகிறது.

மத்திய அமைச்சரவை விரிவாக் கப்பட்டிருப்பதன் மூலம் 45 ஆக இருந்த அமைச்சர்களின் எண் ணிக்கை தற்போது 66 ஆக உயர்ந் துள்ளது. இவர்களில் கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பாது காப்புத்துறை வழங்கப்படும் என தெரிகிறது. இந்தத் துறையை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூடுதலாகக் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x