Published : 20 Aug 2017 12:35 PM
Last Updated : 20 Aug 2017 12:35 PM

உத்தரபிரதேச அரசு உருவாக்கிய சோகம்: ராகுல் காந்தி புகார்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசுமருத்துவமனையில் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அரசு உருவாக்கிய சோகம் என்று குற்றம்சாட்டியுள்ளார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி.

உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தாரை சந்தித்த பிறகு நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

இந்த விவகாரத்தை அடியோடு மூடி மறைக்கப்பார்க்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். குழந்தைகள் மரணத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையே காரணம் என நான் சந்தித்த அனைவரும் என்னிடம் கூறினர்.

இதுபற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையும் அலட்சியமுமே காரணமாக இருந்துள்ளது. குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றார் ராகுல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x