Published : 28 Jul 2017 03:10 PM
Last Updated : 28 Jul 2017 03:10 PM

நீங்கள் எங்கள் நாட்டு பிரதமராக இருந்திருக்க வேண்டும்: சுஷ்மா ஸ்வராஜுக்கு பாக். பெண் புகழாரம்

இந்தியாவில் மருத்துவச் சிகிச்சை பெற பாகிஸ்தான் பெண்ணுக்கு விசா அளிக்க அறிவுறுத்தியதையடுத்து ஹிஜாப் ஆசிப் என்ற அந்தப் பெண் பாகிஸ்தான் பிரதமராக சுஷ்மா ஸ்வராஜ் இருந்திருக்க வேண்டும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் சுஷ்மா தங்கள் நாட்டுப் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தானையே மாற்றியிருப்பார் என்றும் ஹிஜாப் ஆசிப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹிஜாப் ஆசிப் தன் ட்விட்டர் பதிவில், “நான் உங்களை என்னவென்று அழைப்பது? சூப்பர் உமன்? கடவுள்? உங்கள் பெருந்தன்மையை விவரிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை. உங்களை நேசிக்கிறேன், கண்ணீர் பெருகும் போதும் உங்களைப் புகழ்வதை நிறுத்த முடியவில்லை.”

இன்னொரு ட்வீட்டில், “என் இருதயம் உங்களுக்காக துடிக்கிறது. நீங்கள் எங்கள் நாட்டு பிரதமராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த நாடு மாறியிருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஹிஜாப் ஆசிப் இந்தியாவில் சிகிச்சை பெற விசா வழங்குமாறு சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் கவுதம் பம்பாவாலேவுக்கு அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x