Last Updated : 08 Jul, 2017 09:48 AM

 

Published : 08 Jul 2017 09:48 AM
Last Updated : 08 Jul 2017 09:48 AM

பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்

பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியர்கள், பாதுகாப்பு போலீஸா ருடன் மோதலில் ஈடுபட்டதால் நேற்று 7 மணி நேரம் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

பெங்களூரு சர் விஸ்வேஸ்வரய்யா மெட்ரோ ர‌யில் நிலையத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கும் மெட்ரோ ஊழி யர்களுக்கும் இடையே பாதுகாப்பு சோதனை செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மெட்ரோ ஊழியர்கள் 6 பேரை பாதுகாப்பு போலீஸார் தாக்க முற்பட்டதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அல்சூர்கேட் போலீஸார் மெட்ரோ ஊழியர்கள் 6 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் மெட்ரோ ஊழி யர்கள் கைதை கண்டித்து பெங்க ளூரு மெட்ரோ ஊழியர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பையப்பனஹள்ளி - நாயண்டஹள்ளி இடையேயான மெட்ரோ பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் 500-க்கும் மேற் பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போலீ ஸாருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய மெட்ரோ ஊழியர்கள், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரினர்.

நேற்று அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மெட்ரோ ர‌யில் இயக்கப்படாததால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மெட்ரோ ரயில் சேவை பாதிப் பால் பெங்களூருவில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

உள்துறை அதிகாரிகள் மெட்ரோ ஊழியர்களைச் சமாதானப் படுத்தியதால் பிற்பகல் 12.30 மணிக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. இதனி டையே 6 மெட்ரோ ஊழியர்களுக்கு பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை, ஊழியர் களின் திடீர் போராட்டத்தால் நேற்று முதல் முறையாக முடங்கியது பரபர‌ப்பை ஏற்படுத்தியது.

பெங்களூருவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட மெட்ரோ ஊழியர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x