Last Updated : 01 Jul, 2017 07:26 PM

 

Published : 01 Jul 2017 07:26 PM
Last Updated : 01 Jul 2017 07:26 PM

சாமானிய மக்களுக்கு ஜிஎஸ்டி பலன்களை அளிக்க வேண்டும்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கருத்து

நாட்டில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்துள்ளார். சாமானிய மக்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு இது பலன்களை அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதால் ஒரே தேசம், ஒரே வரி, ஒரே சந்தை என இந்தியா மாற்றம் அடைந்துள்ளது. மக்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள். இதில் ஒடிசா முக்கியப் பங்கு வகித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சாமானிய மக்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு பலன்களை அளிக்கும் வகையில் ஜிஎஸ்டி அமலாக்கம் சீராகவும் அனைத்து சந்தேகங்கள் மற்றும் கவலைகளை கவனத்தில் கொள்வதாகவும் இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி-க்கு ஒடிசா அரசு ஏற்கெனவே தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த மே மாதம் நவீன் பட்நாயக் கூறும்போது, ''மறைமுக வரி விதிப்பு முறையில் ஜிஎஸ்டி விரிவான சீர்திருத்தம் கொண்டுவரும். இந்தியாவை ஒரே சந்தையாக மாற்றுவதற்கான முக்கிய நிதிச் சீர்திருத்தம் ஆகும்'' என்றார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x