Published : 29 Jul 2017 02:09 PM
Last Updated : 29 Jul 2017 02:09 PM
பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி தலைவர் மின்ஹஜ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி சன்ஜித் குமார் கூறும்போது, “ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணித் தலைவர் மின்ஹஜ் கான் வெள்ளிக்கிழமை இரவு ஷிக்புரா கிராமத்திலுள்ள அவரது வீட்டில் உறங்கி கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
சுட்டுக் கொல்லபட்ட மின்ஹஜ் அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் மிகவும் செல்வாக்கு மிகுந்தவராக இருந்துள்ளார் என்றும், அவரை ஃபேஸ்புக்கில் 5,000 பேர்வரை பின் தொடர்கிறார்கள் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
மேலும் மின்ஹஜ் கான் பிஹாரைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமத் ஷகாபுதீனுக்கு நெருக்கமாக இருந்துள்ளார். முகமத் தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT