Published : 20 Jul 2017 12:13 PM
Last Updated : 20 Jul 2017 12:13 PM
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (வியழக்கிழமை) காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
பெறப்பட்ட வாக்குப் பெட்டிகள் அகர வரிசைப்படி திறக்கப்பட்டு 4 மேசைகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவு குறித்து தெரிவிக்கப்படும் என்றும் அதன் பிறகு மாலை 5 மணி வாக்கில் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்று மக்களவை செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான அனூப் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை யடுத்து கடந்த 17-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் தலா ஒன்று என மொத்தம் 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்ட வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் 99 சதவீத வாக்குகள் பதிவாயின.
இதில் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT