Published : 23 Jul 2017 01:16 PM
Last Updated : 23 Jul 2017 01:16 PM
ஆண்டுக்கு 100 நாட்களாவது நாடாளுமன்றம் செயல் படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று நடைபெற்ற தோழர் ஷைலேந்திர ஷெல்லியின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் யெச்சூரி பேசியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்றம் ஆண்டுக்கு 60 முதல் 70 நாட்களுக்கு மேல் செயல்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அரசின் செயல்பாடுகள் எப்படி சிறப்பாக இருக்க முடியும். இங்கு நிலைமை இப்படி இருக்க, பிரிட்டன் நாடாளு மன்றம் ஆண்டுக்கு 200 நாட்கள் செயல்படுகின்றன.
எனவே, நம் நாட்டில் ஆண்டுக்கு 100 நாட்க ளாவது நாடாளுமன்றம் செயல் படுவதையும் உறுப்பினர்களின் வருகையையும் உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற பணிகள் சுமூகமாக நடைபெறும். முக்கிய பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் போதுமான அளவுக்கு விவாதிக்க முடியும். சட்டம் இயற்றுவது தொடர்பான பணிகளில் நிலவும் அலட்சியப் போக்கை தடுத்து நிறுத்த இதுபோன்ற சட்டம் மிகவும் அவசியமாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT