

நாடு முழுவதும் அமலாகி உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பை அடுத்து, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா உட்பட 22 மாநிலங்கள் சோதனைச் சாவடிகளை மூடி வருகின்றன.
மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன.
அஸாம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் சில வட கிழக்கு மாநிலங்கள் சோதனைச் சாவடிகளை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையில் பொருட்கள் பரிமாற்றம் நடைபெறும்போது மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை நடைபெறுவது வழக்கம். இதனால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டது. சரக்கு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால், வாகன நெரிசலும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியால், இந்த பிரச்சினைகள் தீர்ந்துள்ளதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.