Published : 16 Jul 2017 10:11 AM
Last Updated : 16 Jul 2017 10:11 AM

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி

டெல்லியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது துப்புரவுத் தொழிலாளர் 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

தெற்கு டெல்லி, கிதோர்னி பகுதியில் இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்தது. கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 5 பேர் அதில் இறங்கினர்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மயங்கிய நிலையில் துப்புரவுத் தொழிலாளர்களை மீட்டனர்.

அவர்களில் 3 பேர் போர்டிஸ் மருத்துவமனையிலும் 2 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x