Published : 29 Nov 2014 03:40 PM
Last Updated : 29 Nov 2014 03:40 PM

ஸ்ரீநகரில் கையெறி குண்டு வீசி தாக்குதல்: 7 பேர் காயம்

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பரபரப்பான லால் சவுக் பகுதியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதி லால் சவுக். இப்பகுதியில், இன்று (சனிக்கிழமை) பிற்பகல் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, "லால் சவுக், பலேடியம் திரையரங்கு பகுதியில் நின்றிருந்த பாதுகாப்புப் படையினரை குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டது. ஆனால், அது தவறி சாலையோரம் விழுந்து வெடித்தது. அவ்வழியாக சென்றவர்களில் 7 பேர் காயமடைந்தனர்" என்றனர்.

காயமடைந்தவர்கள் எஸ்.எம்.ஹெச்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ பகுதியை போலீஸார் சுற்றி வளைத்தனர். தப்பியோடிய தீவிரவாதிகள் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 25-ல் நடைபெற்றது. 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 2-ல் நடைபெறுகிறது. இந்நிலையில், ஸ்ரீநகரில் திவீரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x