காஷ்மீரில் மேக வெடிப்பு வெள்ளத்தில் 6 பேர் பரிதாப பலி

காஷ்மீரில் மேக வெடிப்பு வெள்ளத்தில் 6 பேர் பரிதாப பலி
Updated on
1 min read

காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு 6 பேர் பலியாயினர். பலர் காய மடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டம் தாத்ரி நகரில் நேற்று திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஏற்பட்ட வெள்ளத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கின. படோடே கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் 6 வீடு கள் தண்ணீரில் அடித்துச் செல்லப் பட்டன. 2 கடைகள் மற்றும் ஒரு பள்ளியும் சேதமடைந்தன. இதில் 6 பேர் இறந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.

தோடா மாவட்ட துணை போலீஸ் எஸ்பி. இப்த்கார் அகமது கூறியதாவது: தாத்ரி நகரில் நேற்று இரவு 2.20 மணிக்கு திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. நகரையொட்டி உள்ள ஜமாய் மஸ்ஜித் பகுதியில் உள்ள வாய்க்காலில் வெள்ளம் ஏற்பட்டு பல கட்டிடங்கள் அடித்துச் செல்லப் பட்டன.

மழை வெள்ளத்துக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் இறந்தனர். இவர் களில் 5 பேர் பெண்கள். நாக்னி என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவ் ராஜ் என்பவரின் மனைவி நரு தேவி, அவரது 3 குழந்தைகள், ஆகியோரும் பல்க்ரான் என்ற இடத்தைச் சேர்ந்த 45 வயதான பட்னா தேவி, 15 வயதான சிரிஷ்டா தேவி ஆகியோரும் இறந்தனர்.

காயமடைந்த 11 பேர் இடி பாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். அவர்கள் தாத்ரி நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடு களில் மேலும் பலர் சிக்கியுள்ளனர். இதனால், சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in