Published : 06 Jul 2017 02:24 PM
Last Updated : 06 Jul 2017 02:24 PM
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே மிக்-23 ரக பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த இரண்டு பைலட்டுகள் தப்பினர்.
இது குறித்து இந்திய விமானப்படை தரப்பில், "ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ., தூரத்தில் உள்ள பாலேசர் எனும் பகுதியில் மிக்-23 ரக விமானம் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியின்போது இந்த விபத்து நடந்துள்ளது. விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பத்திரமாக உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT