Last Updated : 06 Nov, 2014 12:51 PM

 

Published : 06 Nov 2014 12:51 PM
Last Updated : 06 Nov 2014 12:51 PM

மத்திய அமைச்சர் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் தொடங்கியவர் மீது வழக்கு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பெயரில் போலியாக பேஸ்புக் பக்கத்தை தொடங்கியவர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர் தன் போலீஸாரிடம் அளித்துள்ள எழுத்துபூர்மான புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது பெயரில் பேஸ்புக் பக்கத்தை ஒருவர் தொடங்கியிருப்பதாக அறிகிறேன். அந்த பக்கத்தின் மூலம் சில வர்த்தக சேவைகளை அளிப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அதற்கான கட்டணம் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த குற்றச் செயலில் ஈடுபடுவது யார் என்பதை கண்டுபிடித்து, அவரை நீதியின் முன் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸி கூறும்போது, “அமைச்சரின் புகார் தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஏ-யின் கீழ் டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவின் சைபர் செல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியவர் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x