Published : 14 Dec 2013 12:03 PM
Last Updated : 14 Dec 2013 12:03 PM

மிசோரம் முதல்வராக லால் தன்ஹாவ்லா பதவியேற்பு

மிசோரம் முதல்வராக காங்கிரஸின் பழம்பெரும் தலைவர் லால் தன்ஹாவ்லா பதவியேற்றார்.

மிசோரம் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடும் பின்னடைவைச் சந்தித்த காங்கிரஸுக்கு மிசோரம் வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

மிசோரமில் டிசம்பர் 4-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றன. 82 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட மிசோரமில், காங்கிரஸ் 33 இடங்களை வசப்படுத்தியது. கடந்த தேர்தலைவிட 1 இடம் மட்டும் குறைவாக வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x