Last Updated : 14 Aug, 2016 11:49 AM

 

Published : 14 Aug 2016 11:49 AM
Last Updated : 14 Aug 2016 11:49 AM

ரக்-ஷா பந்தன் பண்டிகை: மும்பை அஞ்சல் துறை இன்று சிறப்பு டெலிவரி

ரக்-ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் வாழ்த்து கடிதங்கள் மற்றும் ராக்கி கயிறுகள் உரிய நேரத்தில் முகவரிதாரரை சென்றடைவதற்காக மும்பை பிராந்தியத்தில் இன்று சிறப்பு டெலிவரிக்கு அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து அஞ்சல் துறை யின் மும்பை பிராந்திய துணை இயக்குநர் வி.வி.நாயக் கூறியதாவது:

இந்த மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை அரை நாள் விடு முறையை தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறையும் திங்கள்கிழமை சுதந்திர தின விடுமுறையும் வருகிறது.

இந்நிலையில் ரக்-ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு அனுப்பி வைக்கப்படும் வாழ்த்து கடிதங்கள் மற்றும் ராக்கி உறைகள் உரிய நேரத்தில் முகவரிதாரரை சென்றடைவதற்காக ஞாயிற்றுக் கிழமை சிறப்பு டெலிவரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு டெலிவரி மும்பை மாநகரம், முழுவதும் செய்யப்படும்.

இதுதவிர தானே /நவி மும்பை பகுதியிலும் பல்கார், ராய்கத் மாவட்டங்களின் முக்கிய அஞ்சல் நிலையங்களில் இருந்தும் மேற்கொள்ளப்படும்.

ரக்-ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கடிதங்களை அன்றைய தினமே டெலிவரி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டுள்ளோம். வழக்க மான கடிதங்கள் தவிர ராக்கி உறைகள் போன்ற சிறப்பு கடிதங்களும் டெலிவரிக்கு அதிக எண்ணிக்கையில் வந்துள்ளன. ஆன்லைன் வர்த்தக பார்சல்களும் அதிகரித்துள்ளன.

மும்பை பிராந்தியத்தில் அஞ்சல் துறைக்கு வலுவான டெலிவரி நெட்வொர்க் உள்ளது. எனவே மும்பை, தானே, பல்கார், ராய்கத் மாவட்டங்களில் சிறப்பு டெலிவரிக்கான முயற்சி எடுத்துள்ளோம். இதன் மூலம் எங்களின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x