Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM

பிணைக் கைதிகளை மீட்க அதிரடிப்படைக்கு பயிற்சி

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை களின்போது பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை பத்திரமாக மீட்பது எப்படி என்கிற பயிற்சியும் அதிரடிப்படை வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது அவர்களை தீர்த்துக்கட்ட உதவும் தாக்குதல் பயிற்சி மட்டுமே தரப்படுகிறது. அந்த பயிற்சி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்பது பற்றிய பயிற்சியும் அதிரடிப்படை வீரர்களுக்கு தேசிய பாதுகாப்புப்படை வழங்கும்.வி.ஐ.பி.களுக்கு பாது காவல் தரும் பணிக்கு பதி லாக பயங்கரவாத தடுப்பு நட வடிக்கைகளிலும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளிலும் கூடுதல் நிபுணத்துவத்துடன் செயலாற்றும் வகையில் தேசிய பாதுகாப்புப்படை முழு கவனம் செலுத்தும் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலின்போது பொதுமக்களும் பிணையாட்களாக சிக்கிக்கொள்வதால் அவர்களை பத்திரமாக மீிட்க அதிரடிப் படையினர் கவனமாக கையாள வேண்டியுள்ளது. இதுபோன்ற நிலைமை கென்யாவின் நைரோபி நகர வணிக வளாகத்தில் ஏற்பட்டது. மும்பை தாக்குதல் சம்பவத்திலும் இதே நிலைமைதான் அதிரடிப்படை வீரர்களுக்கு ஏற்பட்டது. தீவிரவாதிகளை ஒழிப்பதுடன், பிணைக் கைதிகளின் பாதுகாப்பையும் அதிரடிப்படை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இதற்காக தனியாக அதிரடிப்படை வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்க சிறப்பு பயிற்சி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x