Published : 25 Nov 2013 02:39 PM
Last Updated : 25 Nov 2013 02:39 PM

தேஜ்பால் மீது புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் ராஜினாமா

தெஹல்கா இதழ் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

தெஹல்காவில் தான் பணியை தொடர்வதற்கான சுமுகமான சூழல் இல்லை என்பதால் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேஜ்பால் முன் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

ஏற்கெனவே தி ஹிந்துவிடம் பேசுகையில், தன்னையும் தன் குடும்பத்தையும் அச்சுறுத்தி, பணிய வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகத் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x