Published : 06 Aug 2016 10:52 AM
Last Updated : 06 Aug 2016 10:52 AM
சத்தீஸ்கர் மாநிலம், தன்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையி னர் நக்ஸலைட்டுகள் இடையே நேற்று நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 1 பெண் உட்பட 3 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நக்ஸலைட்டுகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் தன்டேவாடா பீஜப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள ஃபரஸ்பால் வனப் பகுதியில் பாதுகாப்பு படை யினர் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டிருந்தனர். இந்நிலையில் கச்சேகாட் என்ற கிராமத்துக்கு அருகில் அடர்ந்த வனப் பகுதியில் நேற்று காலை பாதுகாப்பு படை யினர் நக்ஸலைட்டுகள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஒரு பெண் உட்பட 3 நக்ஸலைட்டுகள் கொல்லப் பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து 3 துப்பாக்கிகள், அன்றாட பயன்பாட்டுக்கான பொருட்கள் மற்றும் 2 பைகள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் நக்ஸலைட்டுகளைத் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT