Last Updated : 01 Mar, 2017 09:13 PM

 

Published : 01 Mar 2017 09:13 PM
Last Updated : 01 Mar 2017 09:13 PM

டெல்லி பல்கலை. வன்முறையில் ஏபிவிபி உறுப்பினர்கள் இருவர் கைது

டெல்லி பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஒருவரை தாக்கியதாக, ஏபிவிபி (பாஜக சார்பு மாணவர் அமைப்பு) உறுப்பினர்கள் இருவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் பிரசாந்த் மிஸ்ரா, அதே கல்லூரியை சேர்ந்த விநாயக் சர்மா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி கல்சா கல்லூரி அருகே அகில இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த அமன் சின்ஹா என்பவரை இவர்கள் இருவரும் பெல்ட் மூலம் தாக்குவது கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் ஏபிவிபி அமைப்பில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர்.

டெல்லி பல்கலை. வளாகத்தில் கடந்த 22-ம் தேதி நடந்த வன்முறைக்கு எதிராக நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. டெல்லி பல்கலைக்கழகம் நோக்கி நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இப்பேரணி நடைபெற்ற அடுத்த சில மணி நேரத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

“இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டது வீடியோ பதிவுகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x