Published : 03 Oct 2013 10:52 AM
Last Updated : 03 Oct 2013 10:52 AM

அஸ்ஸாமில் சாலை விபத்து: 28 பேர் பலி

அஸ்ஸாம் மாநிலம் பார்பெட்டா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 13 குழந்தைகள் உள்பட 28 பேர் பலியாகினர்,10 பேர் காயமடைந்தனர்.

பார்பெட்டா மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 4.30 மனி அளவில், மேற்கு வங்கத்தில் இருந்து லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி எதிரே வந்த மினி பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. அதே நேரத்தில் விபத்தில் சிக்கிய அந்த பேருந்து மீது, பின்னால் வந்த வாகனம் ஒன்றும் மோதியது. இரண்டு பேருந்துகளும் தலைகீழாக கவிழ்ந்தன. இந்த விபத்தில் 2 பேருந்துகளிலும் இருந்த 13 குழந்தைகள் உள்பட 28 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரி ஓட்டுநர் தப்பியோடினார். தோலாபரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்துக்குள்ளான பேருந்துகளில் இருந்தவர்கள் அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தில் இருக்கும் செங்கல் சூளையில் பணியாற்றுவதற்காக சென்று கொண்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x