Published : 02 Jun 2017 09:18 AM
Last Updated : 02 Jun 2017 09:18 AM
பெங்களூரு அருகே மிளகாய் பொடியைத் தூவி பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூ ருவை அடுத்த ஆனேக்கல் தாலுகா சூரியநகரைச் சேர்ந்தவர் ஹரீஷ் (40). அப்பகுதி பாஜக எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் துணைத் தலைவ ராக இருந்த இவர், கன்னட அமைப் பிலும் முக்கிய நிர்வாகியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஹரிஷ் ஆனேக்கல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந் தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் வழிமறித்து ஹரிஷின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சூரியநகர் போலீஸார் ஹரீஷின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், ‘சொத்துகளை பிரித்ததில் உறவினர்களோடு ஏற்பட்ட தகராறின் காரணமாகவே பழி வாங்கப்பட்டுள்ளது தெரியவந் துள்ளது. இந்தக் கொலையில் ஹரீஷின் உறவினர்களான சந்தீப், கிஷோர், ராஜேஷ் ஆகிய 3 பேருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஹரீஷின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த 3 மாதங்களில் ஆனேக்கல் தாலுகாவில் பாஜகவைச் சேர்ந்த 2 முக்கிய நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் பாஜக நிர்வாகி வாசு வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஹரீஷ் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மூத்த தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள தலித் அமைப்பினர் கூறும்போது, ‘அரசியலில் தலித்துகள் தலைமை பொறுப்புக்கு வருவதை பிடிக்காமல், சொந்தக் கட்சியினரே கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இந்தக் கொலைக்காக வேறு சாதியினர் கொல்லப்பட்டவர்களின் உறவினர் களையும், நண்பர்களையும் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தக் கோணத்தில் விசாரிக்க வேண்டும் என கர்நாடக காவல் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க இருக்கிறோம்' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT