Published : 06 Feb 2017 04:33 PM
Last Updated : 06 Feb 2017 04:33 PM

மக்களவையில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் வெளிநடப்பு

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்தோபாத்யாய் சிட்பண்ட் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சி மக்களவையில் அமளியில் ஈடுபட்டது.

இதனால், மக்களவையில் ஒரேயொரு மசாதாவை மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாம் நாளான இன்று (திங்கட்கிழமை) வழக்கம் போல நாடாளுமன்றம் கூடியது. திரிணமூல் காங்கிரஸின் போராட்டம் மற்றும் வெளிநடப்பால் மக்களவையில் ஒரேயொரு மசாதாவை மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது.

மாநிலங்களவையில் இரண்டு தனிநபர் மசோதாக்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. திமுக எம்.பி. திருச்சி சிவா ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய, சுயேச்சை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் மற்றொரு மசோதாவைத் தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர், கேரளா எம்.பி.க்களுடன் இணைந்து மறைந்த முன்னாள் எம்.பி. அகமதுவுக்கு நாடாளுமன்றம் உரிய மரியாதையை அளிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x