Published : 14 Feb 2014 09:42 AM
Last Updated : 14 Feb 2014 09:42 AM

கேரளத்தில் நாளை சோனியா பிரச்சாரம்

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், கொச்சியில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் சோனியா பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்.

இக்கூட்டத்தில் கட்சி மற்றும் அதன் துணை அமைப்பு களின் நிர்வாகிகள், சிறப்பு அழைப் பாளர்கள் பங்கேற்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொல்லம் நகரில் அதே நாளில் நடைபெறும் ஐஎன்டியூசி தேசிய மாநாட்டிலும் சோனியா உரையாற்றுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக வி.எம்.சுதீரன் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முக்கிய நிகழ்ச்சி இது என்பதால் இந்த பிரசாரக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x