Last Updated : 24 Jun, 2016 11:34 AM

 

Published : 24 Jun 2016 11:34 AM
Last Updated : 24 Jun 2016 11:34 AM

காஷ்மீர்: குப்வாராவில் 24 மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து 3 இடங்களில் நடத்தப்பட்ட வெவ்வேறு என்கவுன்ட்டர்களில் இதுவரை 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "இன்று (வெள்ளிக்கிழமை) காலை குப்வாரா மாவட்டம் பெத்தா வடார் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்தது.

இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

குப்வாரா மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) முதல் 3 வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் இதுவரை 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.

குக்கர் வெடிகுண்டு அகற்றம்:

இதனிடையே ஸ்ரீநகரில் ஹைதர்போரா மேம்பாலத்தின் அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த குக்கர் வெடி குண்டை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தி செயலிழக்கச் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x