Published : 25 Dec 2013 01:35 PM
Last Updated : 25 Dec 2013 01:35 PM

ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: அரசு அலுவலகம் தகர்ப்பு

ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலக கட்டடத்தை மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்.

பாடியா எனும் கிராமத்திற்குள் இன்று அதிகாலையில் பெண் மாவோயிஸ்டு உள்பட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் பலர் நுழைந்தனர்.

அரசு அலுவலகத்தை சுற்றி வளைத்த மாவோக்கள், கட்டடத்தின் ஒரு பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து அலுவலகத்தின் ஒரு பகுதியை தகர்த்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் மத்திய படையினர் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்திய தேடுதல் வேட்டையை கண்டித்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குறிப்பும் விட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x