Published : 08 Aug 2016 10:01 AM
Last Updated : 08 Aug 2016 10:01 AM
அசாமின் கோக்ரஜார் நகர் அருகே உள்ள பலஜன் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று புகுந்த தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎப்பி-எஸ்) தீவிரவாதிகள் 5 பேர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதி களில் ஒருவர் கொல்லப்பட்டார். எஞ்சிய 4 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலஜன் பகுதியை நேற்று பார்வையிட்ட மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘தீவிரவாத அமைப்புகள் எத்தனை வலிமை மிக்கதாக இருந்தாலும் கவலை யில்லை. அவர்களுக்கு எதிராக அரசு நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கும். அப்பாவி மக்கள் 14 பேரை கொன்று குவித்த தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதுவரை கிடைத்த ஆதாரங்கள் அடிப்படை யில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் என்டிஎப்பி-எஸ் தீவிரவாதிகள் தான் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. அவர்களை தேடும் பணியில் அனைத்து பாது காப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர். மக்களையும், அவர் களது சொத்துக்களையும் பாது காப்பது அரசின் முக்கிய கடமையா கும். எனவே அனைவருக்கும் பாது காப்பு உறுதி செய்யப்படும்’’ என்றார்.
பலஜன் பகுதியை பார்வையிட்ட பின், கோக்ரஜார் சென்ற முதல்வர், அங்கு சட்டம் ஒழுங்கு தொடர்பான உயர்நிலை கூட்டத்தை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் பூட்டான் எல்லை யில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள இந்திய பகுதியான பக்ரி குரியில் இருந்து தான் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்த வந்த தாக கோக்ரஜார் துணை ஆணை யர் மது பிரசாத் சர்மா உறுதி படுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT